Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

கல் நெஞ்சக் காரி அவள்

தோற்று போகிறேன் அவளிடம் 

 தொலை தூரப் பயணம், வேலை என்று வீட்டை ஏமாற்றிவிட்டு அவளைக் காண விமானம் ஏரியாயிருந்து.

புறப்பட பதினைந்து நிமிடம் தாமதம் ஆகும் என்ற அறிவிப்பு முதல் விமான பயணம் என்பதனால் கொஞ்சம் அச்சம் வேறு, ஒரு வழியாய் விமான பயணம் திருப்தி அள்ளித் தெளித்திருந்தது. 

அந்த நாடும் என் நாடும் பெரிய வித்தியாசம் இல்லை. என்னை சந்திக்க வருவதாக கூறியவளை இன்னமும் காணவில்லை. நீண்ட நேரமாக காத்திருந்தேன்.

என் காத்திருப்பு ஒரு பெண்ணுக்கானது தான் என்பதை எப்படியோ தெரிந்துக் கொண்ட அருகில் இருந்த பெண்மணி சிறு புண்ணகையுடன் பேச துவங்கினார். ஆனால் அவர்களுடைய முதல் வார்த்தை என்னை ஆச்சர்ய பட வைத்துவிட்டது. ஒரு வேளை மந்திரக் காரியாக இருக்குமோ என்று.

“Don’t worry she will come” என்று எனது டேபிள்எதிர் இருக்கையில் அமர்ந்தார். நன்றாக பேசினார் பேச்சி தொடர எங்கே தங்க போகிறீர்கள் என்று கேட்டார். அவளை தவிர எனக்கு வேறு யாரையும் தெரியாதே!

நான் அவர்களிடம் இல்லை எனக்கு தெரியவில்லை, அவள் வந்த பின் தான் முடிவு செய்யவேண்டும் என்றேன்.

ஒரு வித கேலி சிரிப்புடன், நீங்கள் இங்கு ஐந்து மணி நேரங்களுக்கு மேல் காத்திருக்கிறீர்கள், உங்கள் அழைப்பையும் அவள் ஏற்க்க வில்லை இனியும் அவள் வருவாள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை என்றாள்.

நான் அமைதியாகவே இருக்க, அவள் தொடர்ந்தாள் அதிகமாக காதலில் ஆண்கள் இந்த போராட்டத்தை சந்திப்பதை நான் பார்த்திருக்கிறேன். பெண்களால் ஒரு ஆணை அவ்வளவு எளிதில் முதல் முறை சந்திக்க மனம் ஒவ்வாது.


அவர்களுக்குள் ஒரு பெரிய தயக்கம் இருக்கும். அதுவும் காதலன் எனும் போது அது எப்படி அவள் மிகைபடுத்துவாள். என்று அவள் தொடர…

நான் இல்லை நீங்கள் சொல்வதை தான் ஏற்க்க மறுக்கவில்லை. இருந்தும் ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் நான் இங்கு வந்தது அவளை பார்க்க, அவளை பார்க்க மாத்திரம். 

என் காத்திருப்பு வீணாகாது, நீங்கள் உங்களுக்கு வேறு ஏதும் வேலையிருந்தால் பார்க்கலாம் என்று கொஞ்சம் வேகமாக பேசிவிட்டேன்.

அவள் இருந்தும் அங்கிருந்து நகரவில்லை. அவள் கூறுகிறார் நீங்கள் வீணாக இங்கு காத்திருப்பதற்கு பதிலாக இவ்வளவு செலவு செய்து வந்து வீணாக அமர்ந்து இருக்காமல் இந்த நாட்டை சுற்றிப் பார்க்கலாம் என்றாள்.

காத்திருப்பின் அலாதி இன்பத்தை நான் உணர்ந்து கொண்டிருக்கிறேன். எத்தனை சுற்றுப் பயணமும் இதற்க்கு ஈடாகாது என்றேன். 

ஒரு ஆழ்ந்த புன் சிரிப்புடன் அங்கிருந்து சென்று விட்டாள். 

வெயிட்டர் : கடை மூடும் நேரமாகிவிட்டது இது வரை நீங்கள் எதுவும் ஆர்டர் செய்யவில்லை, யாருக்காகவோ காத்திருக்கிறீர்கள் என்று அறிகிறேன். விரைவில் நீங்கள் அவர்களை சந்திக்க வாழ்த்துகிறேன் என்று அங்கிருந்து நகர்ந்தார்.

நான் கொண்டு சென்றிருந்த அந்த தோள் பையையும் அவளுக்காக பல பரிசுகளை வாங்கி வைத்திருந்த அந்த காதல் சுமையையும் நேசத்தோடு இழுத்துக் கொண்டு அங்கிருந்து எழுந்தேன்.

எதிரே ஒரு கார் வந்து நின்றது. காலையில் என்னிடம் பேசிக் கொண்டிருந்த அந்த பெண் காரில் இருந்து வந்தார் என்னை பார்த்து சிரித்துக் கொண்டே என்ன சார் ஊருக்கு கிளம்பிட்டிங்களா என்றாள். 

நானோ இல்லை கடை அடைக்க போகிறார்களாம் அதான் எதிரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் அமர செல்கிறேன் என்றேன். 

அவ்வளவு சிரம பட வேண்டாம் என்று காரில் இருந்து ஒரு குரல். அது வேறு யாராக இருந்திட கூடும்!

எனது காதலை இப்படி சோதித்திருக்க வேண்டாம் அவள்… 

“அவள் கல் நெஞ்சக் காரியில்லை என் காதல் ராணி”


Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...